Friday, May 3, 2013

கலப்பு திருமணம்: முற்போக்கு சிந்தனையா? குரூர சிந்தனையா?



தமிழ் சமூகத்தில் சாதி:

குறிஞ்சி - குறவர்
முல்லை - இடையர்
மருதம் - பள்ளர்
நெய்தல் - பரதவர்
பாலை - எயினர்

இப்படி திணை வாரியாக உள்ள இனக்குழுக்கள் தான் கால ஓட்டத்தில் தங்களுக்குள் தேவையின் அடிப்படையில் கலந்து பல்வேறு அடையாளத்துடன் பல்வேறு இன குழுக்களை உருவாகினர். அந்த இனக்குழுக்கள் தான் இன்று இருக்கும் தமிழ் சாதிகள். உதாரணம்:

* 'கவுண்டர் என்ற பெயரே சுமார் 1000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில்' இல்லை. -- பேரா.இரவி கவுண்டர், தொல்லியல் துறை, PSG கல்லூரி,கோவை
* கி.பி.12 ஆம் நூறாண்டுக்கு முன்பு தமிழில் 'பள்ளி' என்ற இனம் இல்லை.

இவற்றில் இருந்து, வெவேறு திணை மக்கள் தங்களுக்குள் தேவையின் பொருட்டு கலந்து வெவேறு இனக் குழுக்களை உருவாக்கி உள்ளது தெளிவு. இப்படி உருவான இனக் குழுக்களின் வாழ்வு முறை,பின்னணி,நிலைதன்மை என்பவை உறுதியானவை. காலம் கடந்தும் நிற்பவை. அவ்வாறு இனக்குழுக்கள் புதியதாய் உருவாகும் போது எந்த பிரச்சனையும் (அரிவாள் வெட்டு, கலவரம், ஊரை உடமையை எரித்தல்,கொலை) இல்லை.


    ஆனால் இன்று திராவிடம் என்ற பெயரில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் வந்தேறி வடுகர்கள் முன்வைக்கும் 'கலப்பு திருமணம்' என்பது அவசர கதியில் வளர்க்கப்படும் 'பிராயிலர் கோழி'வகையை சார்ந்தது. அவர்களின் பிரச்சாரமே 'கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்கும் திருமணம்' செய்து வைத்தால் சாதி ஒழிந்துவிடும். இதை பார்க்கும் போது, திராவிட கட்சிகள் அனைத்தும் ஏதோ 'கீழ் சாதி' மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை அது அல்ல. உதாரணம்:

* வட தமிழக மாநிலங்களில் வன்னியர் - பறையர் இடையேயும், தென் தமிழகத்தில் பள்ளர் - மறவர் இடையேயும் ஓயாத சாதி மோதல்கள் இருந்து வருகின்றன. வட மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சாதி சார்பாக குரல் கொடுத்தும், ஊடகங்களில் ஊதி பெருக்கியும், அதை ஒரு மிக பெரிய அரசியலாக செய்து வரும் திராவிட கட்சிகள், இயக்கங்கள், ஆதிக்க சாதி என்று இவர்கள் சொல்லும் வன்னியரை (உண்மையில் இவர்களுக்கு தான் இழப்பு அதிகம்) சாதி வெறியர்கள் போல சித்தரிப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர். (மருத்துவர்  ராமதாஸ் அவர்களின் சுயநல அரசியலால் ஏற்ப்படும் பொது மக்கள் அசவுரியங்கள் இதில் சேராது. அது கண்டனத்துக்கு உரியது).

* ஒடுக்கப்பட்டோரின் காவலானாக விளங்கும் இந்த திராவிட இயக்கங்களின் உண்மை நிலை தென் தமிழகத்தில் தான் பல் இளிக்கிறது. இவர்கள் உண்மையில் யாருக்கு ஒத்துழைப்பு தந்து இருக்க வேண்டும்? இவர்கள் பார்வையில் கீழ் சாதி என்று சொல்லபப்டும் பள்ளருக்கு தானே? ஆனால், இவர்கள் ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மறவர்களுக்கு தானே இன்றும் துணை நிற்கிறார்கள்.? மறவர் ஒட்டு என்பது அதிமுகவுக்கு சொந்தமானது என்பது எழுதப்படாத விதி. இருந்தாலும் திமுக,மதிமுக,தேமுதிக போன்ற ஓட்டுபொறுக்கி காட்சிகளுக்கு அங்கு என்ன வேலை? மறவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜையை அரசு விழாவாக்கி, அனைத்து ஊடங்களிலும் பிரச்சாரம் செய்து, தங்க கிரீடம் தருகிறோம், விமான நிலையத்துக்கு பெயர் வைக்க மத்தய அரசை வலியுறுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் பரமகுடியையே ஸ்தம்பிக்க வைக்கும் சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக பள்ளர்கள் கூடும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை நிகழ்வு எந்த ஊடத்திலும் வெளிவராமல் தடுக்கப்படுவதோ மட்டுமின்றி, ஏகப்பட்ட கெடுபிடிகளும் செய்யபடுகின்றன. பேருக்கு எல்லா கட்சி சார்பிலும் யாரவது ஒருவர் ஒப்புக்கு சப்பாணியாக வந்து அங்கு தலையை காட்டி விட்டு செல்வர். இது என்ன மாதிரியான முற்போக்கு சிந்தனை திராவிடர்களே? வட நாட்டில் ஒரு நிலை, தென் நாட்டில் ஒரு நிலை ஏன்? எப்போதெல்லாம் அங்கு மோதல் வருகிறதோ அப்போதெல்லாம் 'ஆதிக்க சாதிக்கும், தலித்துக்கும் மோதல்' என்று தான் பேசியும்,எழுதியும் வருகின்றனர். அதாவது இருவேறு வர்கத்தும் இடையே சண்டை என்று காட்டுவது தான் இந்த திராவிடர்களின் வேலை. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் மறவர் - பள்ளர் என்ற இரண்டு சாதிக்கு மட்டுமே அங்கு பிரச்சனை என்பது புலப்படும்.

* திராவிடர்கள் ஏதோ ஒட்டுமொத்த 'தேவர்' சமூக மக்களுக்கும் துணையாய் நிற்கிறார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம். அங்கே தான் அவர்களின் உண்மையான கொடூர முகம் வெளிப்படுகிறது. கள்ளர்களின் விழாவான 'பெருங்காமநல்லோர் போராளிங்கள் மூக்கையா தேவர்' நினைவேந்தலுக்கோ, அகமுடையாரின் 'மருது சகோதரர்கள் குருபூஜைக்கோ', மறவர் முத்துராலிங்க தேவரின் குருபூஜை அளவுக்கு எந்த திராவிட கட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?

வட மாநிலத்தில் வன்னியருக்கு எதிராக பறையரை களம் இறக்குவதும், தென் மாவட்டங்களில் பள்ளருக்கு எதிராக மறவரை களம் இறக்குவதும் தான் இந்த திராவிட சக்திகளின் நோக்கம். இந்த அயோக்கியத் தனமான பின்னணியில் 'கலப்பு திருமண பிரச்சாரத்தை' நோக்கினால், திராவிட கட்சிகளின் உண்மை புலப்படும். என்ன அது?

* தமிழ் சாதிகள் தங்களுக்குள் எப்போதும் அடித்து கொண்டே இருக்க வேண்டும். பொன்,மண்,பெண் -- இதில் 'பெண்' என்பவள் மிகவும் sensitive விஷயம் என்பதால், அதில் கை வைக்கின்றனர் இந்த திராவிட சக்திகள். இதன் மூலம் இங்கே எப்போதும் பதட்டம் இருந்து கொண்ட இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணமே ஒழிய 'சாதி ஒழிப்பு' என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக்.  'மறவரை வெட்டுங்கடா, மறவர் பெண்ணை கட்டுங்கடா' என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஜான் பாண்டியன்' (தேவேந்திர சமூகம்) ஏதோ ஒரு சூழலில் பேசி இருந்தார். இதில் 'கலப்பு திருமண' குயுக்தி இல்லை. திட்டமிட்ட செயல் இல்லை. ஏதோ ஒரு கோபத்தின் காரணமாக அது வெறும் பேச்சோடு மட்டுமே நின்றுவிட்டது. --- இது தான் தானாகவே முன்வந்து செய்ய நினைத்தாலும், ஒரு இனக்குழு உருவாகதேவை இல்லாத காரணத்தால் அந்த கருத்து தவிடு பொடியாகும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம். ஆனால் உடும்பு பிடிக இந்த 'கலப்பு திருமண' விஷயம் திராவிட கட்சிகளால் எப்படி நடத்தப்படுகிறது?

"'கீழ் சாதி ஆண்' என் கையில் இருக்கான். அவனுக்கு நான் முழு சப்போர்ட்டு. மேல் சாதியான உன்னை பயமுறுத்த, அடக்கி வைக்க இந்த கீழ் சாதி ஆணை வைத்து உன் பெண் பெண்டுகளை அபகரிப்பதன் மூலம் உன் உடமைகள் மொத்தத்தையும் ஒழித்து விடுவேன்" என்பதை தவிர இந்த திராவிட சக்திகளுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

தர்க்க ரீதியில் திராவிடர்களின் கலப்பு திருமணத்தின் நோக்கத்தை அலசினோம். இனி அதன் பின்னணியை வரலாற்று கண்ணோட்டத்தில் அலசுவோம்.

உண்மை நோக்கம்

நபர் - சாதி - இனம்
...............................................
பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் - பலிஜா நாயுடு - கன்னடர்
ராஜாஜி - தெலுங்கு பிராமணர்
மு.கருணாநிதி - சின்ன மேளம் - தெலுங்கர்
ஜெயலலிதா அம்மையார் - கன்னட அய்யங்கார்
வை கோபால்சாமி - நாயுடு - தெலுங்கர்
விஜயகாந்த் - நாயுடு - தெலுங்கர்

இவர்கள் யாரும் பிறப்பால்,மொழியால் தமிழர்கள் இல்லை. இவர்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் அரைசியல் தூண்கள். மேலே சொன்ன அனைவரும் ஏதாவது ஒரு வகையில் திராவிடத்தை சார்ந்தே வாழ்ந்தும்,தமிழகத்தில் அரசியல் செய்தும் வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.இதில் எவரிடமும் 'தமிழர்' என்ற அடையாளமோ, கட்சியின் பெயரோ கிடையாது.காரணம் இவர்களின் மேலே சொன்ன பின்னணி தான். இவர்களால் திராவிடம் பேசி தான் காலம் ஓட்ட முடியுமே தவிர,தமிழ் நாட்டில் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்ய முடியாது.

    பொதுவாக வந்தேறி வடுகர்கள் இன்று திராவிடம் என்ற பெயரில் தமிழனை ஆண்டு கொண்டு இருந்தாலும், எங்கோ யாரவது 'நீ யார் தமிழனை ஆள?' என்று இவர்களை பார்த்து கேட்டு கொண்டும், 'தமிழ் தேசியம்' பேசிக்கொண்டும், செயலாற்றி கொண்டும் தான் இருக்கிறார்கள். அதற்க்கு திராவிட சிகாமணிகள் கேட்கும் அடுத்த கேள்வியே 'தமிழன் யார்? அப்படி ஒரு இனமே கிடையாதே' என்பது தான். இப்படி கேட்கும் பல திராவிட சிகாமணிகள் 1947 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கோரிக்கை வைத்ததை மறந்துவிட்டார்கள் போலும். யார் தமிழர்? அவரின் அடையாளம் என்ன என்று தெரியாமலேயே நாடு அமைக்க இவர்கள் கிளம்பி விட்டார்கள் போலும். விந்தை தான். :-)

இப்படி பல பேர் பல நேரங்களில் 'தமிழர்,தமிழ் தேசியம்' என்ற பெயரில் இயங்கி கொண்டு இருப்பது, திராவிடர்களுக்கு எப்பவுமே ஒரு கிலி தான். எனவே   'தமிழன்' என்பதற்கு அடையாளமாய் இருக்கும் இங்கே இருக்கும் பல்வேறு இனக்குழுக்களை எப்படி அழிப்பது? (சிங்களனின் அதே 'கலப்பு மண' டெக்னிக் தான்). இனத்தை இன குழுக்களின் அடையாளத்தை அழிக்க கத்தி சண்டை எல்லாம் வேண்டாம், திட்டமிட்ட கலப்பே போதும்.

தமிழ் நாட்டில் இருக்கும் இருவேறு பெரும் இன குழுக்கள்

1. தமிழை மட்டுமே தாய்மொழியாய் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழும் இனக் குழுக்கள் (பள்ளர்,கவுண்டர்,பறையர்,கோனார்,முக்குலத்தோர் etc ...).


2. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தேறிகளாக வந்த வடுக சாதிகளான நாயக்கர்,நாயுடு,கன்னட பிராமின்,சக்கிலியர்,சின்ன மேளம்(இசை வேளாளர்) போன்ற 'தெலுங்கை,கன்னடத்தை' தாய் மொழியாக கொண்ட, இன்றும் அந்த மொழிகளையே பேசி வரும், தமிழர் அல்லாத இனக் குழுக்கள்

மேலே சொன்ன இரண்டு வகையான இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால், 'தமிழன்' என்ற அடையாளம் நாளடைவில் நீர்த்து போய்விடும். பின்பு எவருமே 'நீ யார் என்ன ஆள' என்ற கேள்வியையே கேட்கமாட்டார்கள். அதற்க்கு அவசியமே இல்லாமேல் போய்விடும். திராவிடர்கள் தங்களது மேலாண்மையை தக்க வைத்து, தமிழனை நிரந்தரமாக அடிமையாக்கி விடுவார்கள்.


சாதி ஒழிப்பு: உண்மையில் செய்திருக்க வேண்டியது
* ஒவ்வொரு சாதிக்குமான வரலாறை அடையாளத்தை புரிந்து கொள்ளுதல்
* எந்த அடிப்படையில் ஒரு சாதி கீழ் என்றும், மேல் என்றும் பட்டியலிடுதல்
* அந்த அடிப்படையில் ஒவ்வொறாக களைதல்

(உதாரணம்: பறையர் சில இடங்களில் விவசாய கூலிகளாக,பறை அறைவோராக உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழ் சமூகத்தில் அறிவார்ந்த மக்களாக மட்டும் இன்றி, வேளாளர்களாகவும் இருந்து இருக்கின்றனர். அவர்களின் ஏற்றத்தாழ்வை போக்க, அவர்களின் நிலம் மற்றும் உடமைகள் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டாலே போதும்)

செய்து கொண்டு இருப்பது:
பறையர் சாதி ஆணுக்கும், வன்னியர்/கவுண்டர் சாதி பெண்களுக்கு 'கலப்பு திருமணம்' என்ற திட்டமிட்ட பிரச்சாரம். இது மென்மேலும் இந்த இனக்குழுக்களிடையே பிரிவையும் வெறுப்பையும் தான் விதைக்குமே தவிர, ஒரு போதும் இணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்ப்படுத்தாது.


கலப்பு திருமண பிரச்சார குழுவுக்கு தமிழரின் வேண்டுகோள்கள்:
* தமிழ் சமூகத்தில் காலத்திற்க்கேற்ப இனக்குழுக்கள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. அதன் ஆயுட்காலமும் அதன் நிலைப்புத் தமையும் (stability ) அதிகம். எனவே இங்கே புதிதாக, அதுவும் 'கீழ் சாதி ஆண், மேல் சாதி பெண்' என்று திட்டமிட்டு கலப்பு திருமணம் செய்து வைக்க நினைக்கும் உங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் விளக்க வேண்டும்.

* 'இல்லை இல்லை.கலப்பு மணத்தால் மட்டுமே சாதி ஒழியும்' என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், இன்று கலப்பு மணத்தை முன் நின்று நடத்தும்,வந்தேறி வடுக திராவிட இயக்கங்கள், வந்தேறி வடுக திராவிட சாதிகளுக்கு இடையே (உதாரணமாக: ஆதிக்க சாதி நாயக்கர் பெண் , கீழ் சாதி அருந்ததியர் ஆண் ) முதலில் 'கலப்பு திருமணத்தை' முடுக்கி விட்டு, செய்து முடியுங்கள். அதன் பலனாக 'சாதி ஒழிப்பு' எந்த வகையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு விட்டது என்பதற்கான போதிய புள்ளி விவரங்களையும், அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட மறுமலர்ச்சியையும் பட்டியல் இடுங்கள்.

தமிழர்களாகிய நாங்கள் (பள்ளர்,பறையர்,வன்னியர்,கவுண்டர்,முக்குலத்தோர்,கோனார் etc ) தேவையின் பொருட்டு எங்களுக்குள் உருவாகிய இனக்குழு உருவாக்க கோட்பாட்டிற்கும், நீங்கள் கொடுக்கும் சமூக மறுமலர்ச்சி புள்ளி விவரங்களுக்கும் ஏதும் வேறுபாடோ, வித்தியாசமோ இருந்தால், அதை நாங்கள் திருத்தி கொள்கிறோம். பின்பு அந்த அடிப்படையில் எம்மில் இருந்து கால ஓட்டத்தில் வேறு வேறு இனக் குழுக்கள் உருவாகும் போது பயன்படுத்தி கொள்கிறோம். இதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், எம்முள் பிரச்னையை தூண்டுபடி,'கலப்பு திருமண பிரச்சாரத்தை'  செய்து,செயலாற்ற வேண்டாம்.

பின் இணைப்பு
காதல் திருமணம், கலப்பு திருமணம்: வேறுபாடு
காதல் திருமணம் -- சாதி மதம் கடந்து இயல்பாய் மனிதருக்குள் தோன்றும் உணர்வு. இது பல ஆயிரம் காலமாக இங்கொன்றும் அன்கோருமாய் நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலும் நடக்கும், மக்களால் விரும்பப்படும் திருமணங்கள் (அது ஆதிக்க சாதியை இருந்தாலும், கட்டு வாழ் பழங்குடி மக்களாய் இருந்தாலும்) பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களே.

கலப்பு திருமணம்: கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்குமான திட்டமிட்ட திருமணங்கள்.




35 comments:

  1. தெலுங்கு சாதிகளான ரெட்டி, ஒட்டர் மக்களை குறிப்பிட மறந்து விட்டீரே...!
    -----------------------------------
    சங்கிலி செ.இரா.செல்வக்குமார் - நக்கசேலம் நாடு - பெரம்பலூர் - சோழ மண்டலம்.

    ReplyDelete
    Replies
    1. இப்படியே ஆராய்ந்தால் கடைசியில் குரங்கு சாதி மட்டும் தான் இருக்கும்.மனித சாதி இருக்காது.ஆப்பிரிக்க வந்தேரிகளே நாம் என்பதை மறக்க வேண்டாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரின் தமிழ் உணர்வு வேண்டுமே தவிர வெறும் சதை எலும்பால் உருவான பிறப்பால் அல்ல தோழரே

      Delete
    2. தமிழ் சாதி தெலுங்கு சாதி கன்னட சாதி கேரள சாதி இன்னும் எத்தனை சாதிகள் இருக்கிறது? தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் வேற்று சாதியினர் மட்டும் இல்லை வேற்று நாட்டவறும் இருக்கிறார்கள்.நம் பெருமையை நமக்கு எடுத்து சொன்னவர்கள் தமிழ் உணர்வுள்ள வேற்றுநாட்டவர்கள். தமிழ் என்பது சாதி அல்ல உணர்வு உயிர்

      Delete
  2. வந்தேறி வந்தேறி எனும் போது வந்தேறியை சாதி கொண்டுதானே அடையாளம் காட்டுகிறோம் அதே நேரத்தில் நம்மையும் சாதி கொண்டு தானே தெரிந்து கொள்கிறோம். இன்னும் என்ன தயக்கம் எனதருமை த்தமிழ்த்தேசியமே சாதி மறுப்பு என்னும் திராவிட க்கழுத்தறுப்பை கழித்துக்கட்டுங்கள். எல்லோரையும் வாழ விடுவோம். யாரை ஆள வைப்பது என்பதை சாதியைக் கைவிட்ட பின் எதை வைத்துச் செய்வது.
    ஏற்றத்தாழ்வுகளற்ற சாதியத்தமிழ்ச் சமூகமே நமது வலிமை. குறுக்குச்சால் ஓட்ட அங்கு குள்ள நரிகள் இருக்காது.


    ReplyDelete
  3. தமிழ் நாட்டில் மன்னராட்சிகளை ஒழித்து களப்பிரர் ஆட்சி என்று 44 ஆண்டுகள் நடந்தது. உண்மையில் அதுதான் உழைக்கும் மக்களுக்கு பொற்காலமாக திகழ்ந்தது.மண்ணின் மைந்தர்கள் இழந்த நிலங்களை மீட்டுக்கொடுத்துள்ளனர், பெண்களை கவர்ந்து சென்று அந்தபுரத்திலே அடைத்த மன்னனிடமிருந்து மீட்டு அதுபோன்றொரு நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் செம்மையான ஆட்சி புரிந்துள்ளார்கள்.களப்பிரர் என்பவர் வேறுயாருமல்ல இன்று சொல்கிறார்களே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட இனம் எனும் உழைக்கும் மக்கள் அவர்கள் தான். அதுபோல் உழைக்கும் மக்கள் அரியணை ஏறி ஆட்சி செய்தால் தான் இந்த மண்ணின் மீது உண்மையான அக்கறையோடு முன்னேற்றுவான்.அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு நல்ல இணக்கமாக இருப்பார்கள். வள்ளுவனும், ஔவை பாட்டியும் தொல்காப்பியரும் பாடிய பாடல்களில் சாதியென்ற ஒரு சொல் தமிழினத்திடம் இருந்ததாக தெரியவில்லை.பின்னாளில் வந்தவன் புகுத்தியதே இந்த சாதி.அதைவைத்து கொளுத்தி நல்ல சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. காதல் திருமணத்தை தான் ,கலப்பு திருமணம் என்று சொல்லி சாதி வெறியர்கள் எதிர்க்கிறார்கள்,தலைவர்களை தெலுங்கள் ,கன்னடியர் என்று குறிப்பிட்டு நாம் தமிழராக இருப்போம் என்றால் அதை வரவேற்கலாம்,ஆனால் அவர்களை தெலுங்கர்,கன்னடியர்,என்று குறிப்பிட்டு விட்டு நாம் சாதிகளாக இருப்போம் என்று கூறுவது,தமிழ் உணர்வன்று,சாதிய உணர்வு,சாதிய உணர்வை தூக்கிபிடிக்க ,தமிழ் கவசத்தையும்,பிறரை தெலுங்கர்,கன்னடியர் என்று தூற்றுவதையும் செய்வது தவறான போக்கும்,இது மறைமுக சாதிய ஆதரவான கட்டுரை,மறைமுகம் என்ன நேரிடையாகவே சாதிவெறி கட்டுரையாக தான் எனக்கு படுகிறது,

    ReplyDelete
    Replies
    1. எது காதல் திருமணம்,எது கலப்புத் திருமணம்,எது பணம் பறிக்க சதிசெய்யும் ஏமாற்றுத் திருமணம்,என்பது எங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.பிற்படுத்தப்பட்ட பெண்களை காதல் நாடகமாடி தூக்கிக்கொண்டு போய் சீரழித்து,அவர்களின் பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கும் சதிகாரர்களின் செயலுக்கு கண்டனமாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.மேலும் இவர்களின் அக்கிரமத்தை எக்கலிப்போடு ஆதரிக்கும் வந்தேறிகளின் நோக்கத்தை முதல் முறையாக சரியான கோணத்தில் அணுகியுள்ள தோழர் கடுங்கோன் பாண்டியனின் நேர்மையும்,துணிச்சலும் பாராட்டப்பட வேண்டியது.வந்தேறிகளுக்கு மட்டுமே இக்கட்டுரை சுரீர் என்று பின்னாலே மிளகாய் வைத்தாற்போல இருக்கும்.வடுகர்களை வெளியேறச் சொல்லி எல்லாம் இக்கட்டுரை கூறவில்லை,யாரும் பயப்பட வேண்டாம்.இவ்வளவு காலமும் ஏன் நம் தமிழருக்குள் இவ்வளவு ஜாதித்துவேசம் உள்ளது என்று குழம்பும் தமிழ் இனப்பாச மனிதாபிமானிகளுக்கு சரியான நேர்மையான பதிலாக இக்கட்டுரையில் பகிரங்கப்படுத்தப்பட்ட உண்மை என்னையும் ஒரு பின்னூட்டம் போடத்தூண்டியது.எங்களுக்குள் ஆயிரம் பிரிவினைகள் இருப்பினும் தமிழனாக நாங்கள் ஒன்று சேரும் காலம் என்றைக்கேனும் வரும் ஆனால் அவ்வாறு சேராதபடிக்கு எங்களை யார் யார் பந்தாடியுள்ளனர் என்றும்,அதே சமயம் என்றைக்கேனும் தமிழ் சமூக ஜாதிகளுக்குள் நல்லிணக்கமும்,ஏற்ற தாழ்வற்ற அன்பும் மலரும்,அதுவரை வந்தேறிகளின் கைப்பாவையாக மாறி அவர்களின் சுய பாதுகாப்பிற்கு தூண்டப்படும் கலவரங்களில் தமிழர்கள் பலியாக வேண்டாம் என்றே கடுங்கோன் பாண்டியன் இதை எழுதியுள்ளார் என்பது புரியவில்லையா.ஏன் எங்களுக்கு தமிழ் கவசம் கூடாதா?ஏன் எங்களுக்குள் ஜாதிப்பற்று இருக்கக்கூடாதா?ஏன் எங்கள் ஜாதிகளின் மேல் நாங்கள் பெருமிதம் கொண்டால் உங்களுக்கெல்லாம் ஏதோ செய்கிறதே...சாதி மறுப்பு என்ற பருப்பு இனி வேகாது.தற்போது நடப்பவைகள் எல்லாம் சாதி பற்றி நினையாத தமிழனுக்கும் சாதிப்பற்றை உண்டாக்கும் என்பதே உளவியல் ரீதியான உண்மை.சாதியை ஆதரிக்கக் கூடாது என்று எங்களை அதட்ட யாருக்கும் தகுதியில்லை,எங்கள் தமிழ் ஜாதிகளின் பாரம்பரியம் என்பது பெருமிதப்பட வேண்டியதாகவே இருந்தது.ஒவ்வொரு ஜாதியும் எப்போதேனும் இப்பூமியை ஆண்ட பரம்பரையாகவே இருந்துள்ளது இவையெல்லாம் தமிழனுக்கு மட்டுமே சாதி மறுப்பு கோரும் வந்தேறிகள் வரும் வரைக்கும் தான்...பள்ளரின் பண்ணையில் கள்ளர் வேலை செய்த வரலாறும் உண்டு.பின்னாளில் என்றைக்கோ வந்தோரால் வகுப்பு வாதமும் வளர்த்து விடப்பட்டது பள்ளரும் திட்டமிட்டே தாழ்த்தப்பட்டார் என்று இப்போது அரசியல் சதியாளர்களே உங்களை எல்லாம் பார்த்தபின்னே புரிகிறது.ஆனாலும் இனி சாதியம் எங்கும் அதிகமாகவே பேசப்படும்.எங்களுக்குள் எவ்வளவு சாதிப்பற்று இருப்பினும் சகோதரர் கடுங்கோன் பாண்டியனுக்கு கை கொடுக்க நான் பள்ளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.நான் ஆதிக்க சாதி என்று வர்ணிக்கப்படும் ஒரு சாதியை சேர்ந்த தமிழன்.ஏற்ற தாழ்வு கோராமல் தமிழனாக நாம் கை கோர்க்க வேண்டிய காலம் கனிந்து விட்டது.உண்மை நிலையை எடுத்துக்கூறிய சகோதரர் கடுங்கோன் பாண்டியனுக்கு பாராட்டுடன் நன்றியும் கூறிக்கொள்கிறேன்.

      Delete
    2. முருகன்

      சாதியின் அடிப்படையே படிநிலை (ஏணி போன்றது), அதில் உயர்வு தாழ்வு கற்பித்தல், அகமணமுறை, ஒவ்வொரு சாதிக்கும் பரம்பரைச் சடங்குகள் ஆகியவையே சாதியின் வடிவம். இதில் சாதி இருக்கும் சமத்துவமும் இருக்கும் என்பது வேடிக்கையானது கேலிக்குரியது.

      சாதியம் ஒழியும்போதே அங்கு இனம் மலர்கிறது. சாதி எந்தளவுக்கு ஒழிக்கப்பட்டிருக்கிறதோ அந்தளவுக்கு அந்த இனம் வளர்ந்திருக்கிறது, ஒற்றுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. சாதியும் இனமும் இரு வேறு எதிர்ரெதிர் துருவங்கள். இதில் சாதிபாசம் என்ற பெயரில் இனத்தை அழிக்கத்தானே முடியும். எடுத்துக்காட்டு இலங்கை. மிக உச்ச வெற்றியில் இருந்த ஈழத்தில் அதில் திட்டமிட்டே சாதிப் பிரச்சினையை கொண்டுவந்து துரோகியாக மாற்றிய கருணா, ஏதோ அவர்தான் சாதிக்காக போராடுவது போல் பாவ்லா காட்டினார். அந்த இனத்தினை உடைப்பதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் சாதியை கையாண்டார்கள். சாதி இனத்தைக் கொல்லும் கொல்லி.

      வேறு இனத்தவன் தான் எதிரி என்று இன்று தமிழகத்தில் பேசுகிறீர்கள். ஆனால் சாதியை வைத்துக்கொண்டிருக்கும் நம்மைப் பற்றியும், ஏன் அதே சாதியை வைத்திருக்கும் அவர்களைப் பற்றியும் கவலை இல்லை. தமிழ் இனத்தைவிட அது வாழவேண்டும் என்ற விருப்பத்தைவிட சாதியைக் காப்பாற்றவேண்டும் என்ற ஆர்வம்தான் தெரிகிறது. சாதிக்காக இனத்தையும் ஒழிக்கவேண்டும் என்ற விருப்பம்தான் தெரிகிறது. எவன் ஒருவன் சாதியை ஒழிக்க முன்வரவில்லையோ அவன் இனத் துரோகியா அன்றி வேறில்லை.

      ஆந்திராவில், கர்நாடகாவில், கேரளத்தில், தமிழகத்தில் ஆகிய எல்லா மாநிலங்களிலும் வந்தேறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். மதராசு பிராவின்ஸ் என்று இருக்கும்போது எல்லா தேசிய இனத்தவரையும் ஒடுக்க தமிழர்கள் அதிகம்பேர் அதிகாரிகளாக இருந்து ஒடுக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் மாற்றுவது என்பது தமிழர்களை ஒழிப்பதல்ல. அதேப் போல் இன்று இதையெல்லாம் மாற்றுவது வேறு இனத்தவரை ஒழிப்பதல்ல. சாதாரண மக்களுக்கும் பதவியில் இருந்த ஆட்சி அதிகாரத்தில் இருந்த வேறு இனத்தவருக்கும் வித்தியாசம் தெரியாமல் எல்லோரையும் பொதுமைப் படுத்துகிறீர்கள். ஆதிக்கத்தை ஒழித்து ஒரு மக்கள் ஆட்சியை கொண்டுவருவது, உண்மையான மக்களாட்சியாக தேர்ந்தெடுப்பது, திருப்பி அழைப்பதும், நம்மை அடிமைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்நிய ஆதிக்கத்தை ஒழிப்பதும்தான் இன்றைய தேவை. தமிழை, தமிழ் மக்களை அடிமைப் படுத்திக்கொண்டிருக்கும் ஆங்கிலமும் உங்களுக்குத் தெரியவில்லை, ஆங்கிலேயனும், (அமெரிக்கனும்) உங்களுக்குத் தெரியவில்லை. உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரனே மிகப் பெரிய எதிரியாக தெரிகிறான். நம் அறியாமையின் அளவு அவ்வளவு. இதைப் பயன்படுத்திக்கொண்டுதான் இன்று அந்நிய ஆதிக்கவாதிகள் அமெரிக்காவும், ரஷ்யாவும், ஜெர்மனும், பிரான்சும், பிரிட்டனும் நம்மை அடிமைப் படுத்த முயன்றுக்கொண்டிருக்கிறது. யார் நம்மை அடிமைப்படுத்துகிறானோ எவன் நம் மொழியை முற்றிலும் அழித்துக்கொண்டிருக்கிறானோ அவனை எதிர்க்காமல் இருக்கவே இதுப்போன்ற சாதி பிரச்சினையும், இனப் பிளவையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். இங்கு தமிழகத்தில் வேறு இனத்தவர்கள் நம்மை அடிமைப்படுத்தவில்லை. ஆனால் முரண்பாடு இருக்கிறது. அது அண்டை நாடுகளாக வெவ்வேறு நாடுகளுக்கிடையில் கிடக்கும் முரண்பாடு போலத்தான். ஆனால் அதைத் தீர்த்துக்கொள்ள செய்ய வேண்டியது ஒரு ஜனநாயகத் தீர்வு. அதே சமயம் இந்த சமூகத்தை (எல்லா மாநிலத்திலேயும், இனத்திலேயும்) ஒரு ஜனநாயக அடிப்படையை கொண்டுவருவதற்காகப் போராட வேண்டும். அதற்கு இந்தியா முழுவதும் இந்த சாதி ஆதிக்கத்தை சாதி அமைப்பை ஒழிக்கப் போராடவேண்டும். அது இல்லாமல் மற்றெல்லாப் பேச்சும் நயவஞ்சகமான இன ஒழிப்பு பேச்சே. திருமணம் குறித்து பிறகு பேசுவோம்.

      Delete
    3. Let me say - Make pool water into dirty to catch the fish – Make the caste into dirty by Love marriage to catch the ‘Tamil-origin ’ which we lost by Brahmins.

      Delete
  5. (1).'Gounder' hal eppadiththamilaraanarhal endre puriyavillai
    (2) Kamarasarukkuppin ean oru thamilanum munnaal vara mudiyavillai
    (3)dhravida dhravida ennaikkadalil thookkippottaalul kattu maramaha...............eanrtu sollamal;intha inadrohi tamil tamila eantru thaane eamaatrukiraan
    (4) oruvan raththathin raththam eanhiraan; oruvan udan pirappe eandre eamaaatruhiran; thamilan ivarhaldam adimayaahiraan.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. எம் மக்களே என்று நாம் தமிழர் கட்சி கூறியது இத்தனை நாள் தமிழர்களை என்று நினைத்தேன். ஆனால் சாதி ஆதிக்க தமிழர்களை என்று இன்று புரிந்து விட்டது.வந்தேரிகள் என்றும் தமிழ் சாதிகள் என்றும் உங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல சமாதானங்களை கூறினாலும் பழைய பண்ணையடிமை முறையை மீட்க துடிப்பதே உங்கள் மொத்த எண்ணமாக உள்ளது. நம் வாழ்வியலை தொழிலை மண்ணை வளங்களை அபகரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களையும் முதலாளிகளையும் எதிர்க்க துப்பில்லாத கட்சிகள் தான், அவர்களை ஆதரிக்கும் கட்சிகள் தான் கீழிலும் கீழான அனைத்து ஒடுக்குமுறைகளையும் அனுபவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் செய்யும். அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்று திரட்டுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. vennilarajesh,இந்த கருத்தை தான் நானும் என் பதிவில் பதிந்திருக்கிறேன்,நாம் தமிழர்கள் என்றுகூறிக்கொண்டுஇவர்கள் சாதியை தான் வளர்க்கிறார்கள்,

      Delete
    2. KALLAPIRAR Reigns said that ‘Irunda kalam’ – Dark times. Means that they did’t rule properly. They did’t Sculptures,Sepedukal.,like other tamil gods…Recent researches will unveil everything…

      Delete
  8. 400 வருடமாக தமிழ் பேசும் மக்கள் தமிழர் அல்ல என்ற கூற்று ஏற்கமுடியாத ஒன்று. அவ்விதம் பார்த்தால் உலகத்தில் உள்ள தமிழர்களில் பாதிப் பேர் தமிழர்கள் அல்ல என்றாகும். தமிழர்களின் விரோதியே இந்த பழமையான பிற்போக்கு சிந்தனைதான். தமிழை தாய் மொழியாக கொண்டு பேசும் மக்கள் அனைவரும் தமிழர்களே. ஈதை அறியாத வரை தமிழர்களின் வளர்ச்சி கனவாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. 'நீங்கள் தமிழனா' என்ற கேள்வி எப்போதும் ஒரு சாதாரண குடிமகனை நோக்கி கேட்கப்படாது. என்னை ஆளுபவனையும்,ஆள நினைப்பவனையும் மட்டுமே நோக்கி கேட்கப்படுகிறது.

      Delete
    2. தமிழ் பேசும் கன்னட தெலுகு சகோதரர்களை இங்கு யாரும் விரோதியாக கருதவேயில்லை.தமிழனுக்கு இது போன்ற ஈனத்தனம் வரவே வராது.திராவிடக் கட்சிகளின் தலைவன் என்று நம்பப்படும் பெரியார் என்பவர் தமிழ் விரோதப்போக்கு கொண்டவர்,அவர்போலவே அவரைப் பின்பற்றிவந்த அனைவரும் தெலுங்கு பேசுபவர்களாகவும் தமிழர்களுக்கு மட்டுமே திராவிடவாதம் போதிக்கும் சமர்த்தர்களாகவும் இருக்கின்றனர்.ஆனால் தெலுங்கர்,மலையாளி,கன்னடர் போன்றோர் யாரும் தம்மை திராவிடர் என்று கூறுவதை விரும்புவதில்லை.நாங்கள் சொல்லவிரும்பியது இதுதான்.இன்னொன்று நண்பரே தமிழ்ச் சமூகம் சுயமாக சிந்திக்கும் சக்தியற்றுப் போய்த்தான் எப்போதும் இருக்கிறது.ஆனாலும் ஒரு பக்கத்தில் இதையெல்லாம் தாண்டி இறைவனின் ஆசியோடு முடிந்தவரை இளைய சமுதாயம் முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது.

      Delete
    3. தமிழ் பேசும் கன்னட தெலுகு சகோதரர்களை இங்கு யாரும் விரோதியாக கருதவேயில்லை.தமிழனுக்கு இது போன்ற ஈனத்தனம் வரவே வராது.திராவிடக் கட்சிகளின் தலைவன் என்று நம்பப்படும் பெரியார் என்பவர் தமிழ் விரோதப்போக்கு கொண்டவர்,அவர்போலவே அவரைப் பின்பற்றிவந்த அனைவரும் தெலுங்கு பேசுபவர்களாகவும் தமிழர்களுக்கு மட்டுமே திராவிடவாதம் போதிக்கும் சமர்த்தர்களாகவும் இருக்கின்றனர்.ஆனால் தெலுங்கர்,மலையாளி,கன்னடர் போன்றோர் யாரும் தம்மை திராவிடர் என்று கூறுவதை விரும்புவதில்லை.நாங்கள் சொல்லவிரும்பியது இதுதான்.இன்னொன்று நண்பரே தமிழ்ச் சமூகம் சுயமாக சிந்திக்கும் சக்தியற்றுப் போய்த்தான் எப்போதும் இருக்கிறது.ஆனாலும் ஒரு பக்கத்தில் இதையெல்லாம் தாண்டி இறைவனின் ஆசியோடு முடிந்தவரை இளைய சமுதாயம் முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது.

      Delete
  9. @Venkatesh Ramalingam , @vennilarajesh

    ஆகிய தோழர்களுக்கு, முதலில் சாதி பற்றி பேசும் முன்பு கீழே சொல்லப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும்.

    feudalism
    ========
    * நால்வர்ண பிரிவு போன்ற மக்கள் பிரிவுகள் என்றால் என்ன,
    * சாதி என்றால் என்ன,
    * அதை யார் உருவாக்கினார்கள்,
    * அது தொழில் அடிப்படையில் அமைந்ததா,
    * இல்லை பிறப்பின் அடிப்படையில் அமைந்ததா,
    * எதற்க்காக உருவாக்கினார்கள்,
    * இப்போது இருக்கும் சண்டைகள் அப்போது இருந்ததா
    * இல்லையா,இல்லை என்றால் ஏன்,
    * இருந்திருந்தால் எப்படி தமிழன் உலகாண்டு இருக்க முடியும்....? ---

    இப்படி சில அடிப்படை விசயங்களையே உள்வாங்கி கொள்ளாமல் 'சாதியை ஒழிக்கிறேன் என்று ஒரு முற்போக்கு கூட்டமும்(?), சாதியை காக்கிறேன் என்று ஒரு சாராரும்' மோதி கொள்வது நகைப்புக்கு உரியது.

    குறிப்பு: சாதி பற்றி பேசும் முன்பு நாம் சற்று 'feudal system ' பற்றி நெட்டில் தேடி பார்த்தால் நல்லது. அந்த feudalism என்பது எப்படி உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவத்தில் உள்ளது என்பதும் நாம் உள்வாங்க வேண்டும். அப்போது தான் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருக்கும் நால்வர்ண பிரிவுகளை நாம் புரிந்து கொள்வதுடன், பார்ப்பான் தான் சாதியை நம்முள் விதைத்தான் என்ற அபத்த பேச்சுகளையும் தவிர்க்கலாம். உலகம் முழுக்க, இந்தியா முழுக்க சாதி இருந்தாலும், ஏன் தனக்கென்று ஒரு பிரச்சனை வரும் போது கன்னடனாக,மலையாளியாக ஒன்று சேரும் அந்த அந்த இனம், இங்கே தமிழனாக நாம் ஒன்று சேர முடியாமல் போகிறது என்றும் கொஞ்சம் விளங்கும்.

    More referrence:
    * https://en.wikipedia.org/wiki/Feudalism
    * Japan fedual system: http://asianhistory.about.com/od/japan/p/ShogJapanClass.htm
    * Early Civilization in the Indus Valley: http://www.ushistory.org/civ/8a.asp


    நான் மீண்டும் மீண்டும் இங்கே சொல்லி கொள்வது ஒன்று தான். நால்வர்ண பேதத்தை ஒரு நிலையான சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு உருவாக்கியவன் தமிழன் தான். பெரியார் சொல்வது போல பார்ப்பான் அல்ல. இதற்க்கு தான் மேலே உள்ள ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இன்று அந்த பிறப்பின் அடிப்படையிலான நால்வர்ண வேறுபாட்டில் சிக்கல் இருப்பது எங்களுக்கும் தெரியும். அதை இன்று இரவு உட்கார்ந்து நாளை இரவு சரி செய்ய முடியாது. அதற்க்கு காலம் ஆகும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக எம்மால் சொல்ல முடியும். எம்மால் உருவாக்கப்பட்ட நால்வர்ண பிரிவில் இடையில் வந்த வந்தேறிகளால் குழப்பம் விளைவிக்கப்பட்டது. அதை எம்மால் தான் சரி செய்ய முடியும். வந்தேறிகளான திராவிட கட்சிகள் அல்ல. அவர்களை அணுகினால், உங்களுக்கு மென்மேலும் அழிவுதான். அப்படி நால்வர்ண பிரிவு மீண்டும் வந்தால் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா...?

    இன்றைய நால்வர்ண பிரிவில் முற்போக்கு சிந்தனையாளரும், ஆதிக்க சாதியும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியை அந்த நிலையிலேயே வைத்து பார்க்கின்றனர். இந்த இரண்டு கண்ணோட்டமுமே தவறு.

    உண்மையில் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி தமிழன் உண்டாக்கிய நால்வர்ண பிரிவில் 'BATA செருப்பு கடை அதிபதியாக,தன தொழிலை மிக சிரத்தையுடன்,சமூக அந்தஸ்த்துடன் செய்து கொண்டு இருப்பார்'. அவரை கீழாக பார்க்கும் சிந்தனை ஏற்ப்பட வாய்ப்பே இல்லை. ஒருவேளை அப்படி யாரவாது 'அடேய் செருப்பு தைக்கும் பயலே' என்று கூறினால், அப்படி கூறியவரின் பல்லை ஒரு கவுண்டரே அடித்து உடைப்பார்.

    இப்போது புரிந்து இருக்குமே.....? எந்த அளவுக்கு இங்கே சாதி குழப்பம் உங்களுக்குள் விதைக்கப்பட்டு இருக்கிறது என்று?

    ReplyDelete
    Replies
    1. Caste was not in among tamil people before B.C. or any of tamil poems before. only based on four lands, people were categorized like in ‘Tholkoppiyam’. ‘PAALAI’ later included (Marutham - m Mullai-m muraimail thirienthu...). In Marutham, People did different jobs (18 - jobs),farming under Kings , all are called Mallar or Pallar. After A.D., Brahmin domination ruled major role in Chara,Chola and Pandiya reigns. The became Hindus started to believe on 'Life after Death' so they did whatever Brahmins said. They started to believe in ‘Velvikal’ and ‘Yagangal’ (Bramatheyam). Became fools and slaves of Brahmins they depart far from people, tamil gods, tamil culture and every tamil____.
      (They keeps on fighting with each other kings.)
      Hence, People hate them and some minor land kings, Village leaders (Kuduman). So that only ‘KALAPIRAR’ defeated them easily with the support of tamil people and minor land kings and ‘Kudumans’ who hated Brahmins and their slave Tamil kings (Chera, Chola and Pandiya).
      They revert back what Tamil kings did to Brahmins because they were Buddies and Jains (Buddhism and Jainism are for normal people not like Brahmins who are do anything for money and Power. Older tamil poems said that they are not civilized people and don’t know dignity and culture for whom Tamil kings became slaves)
      During the reigns of ‘KALAPIRAR’ people became very happy because they divided the lands into poor people, people became same at all level.
      ‘Thiriu Kural’ - (Thriruvalluvar – Jain)
      ‘Naladiyar’
      Eighteen minor poems (Neethi Nollkal – Justice books)
      ‘Inna narpathu’, ‘Inniyavai Narpathu’
      Kudimakkal Kappiyam - ‘Manimakalai’ , ‘Silappathikaram’ – (Illangovadikal – jain - Grandson of Karikala cholan and Son of Chera king)
      Screened during their reigns only.
      They were very careful with the power, land and money not became in the hand of Buddhism.
      and Brahmins becomes untouchable people because of their illegal inhuman activities. If someone entered into their village they will force them out of their vision and break the pot (Water with cow shit) at the entrance of village. (Note:-It was followed and being followed by PARAYARs during British period /now .)

      Here – note that not only Tamil kings , all Kings over the India (now called) slaved to Brahmins

      Delete
    2. After 350 years , Kandugon pandiyan with the help of (Brahmins, Pallavas and Salukkiyas) who defeated the KALAPIRARs. They gave the authority from people to Brahmins, gave lands , first rights , everything…
      Forced KALAPIRAR to Hindus , hanged, killed , sat on sharp edge tree, and ran them out of lands…and they became untouchables now they called as – PARAYAR
      Removed Buddha idol from ‘Bodhi Satva tree’ (Arasa-maram) and placed Vinayagar idol and the story of Vinayagar that he is a brother of Tamil god Murugan and Son of Sivan and Parvathi.
      They made the tamil history with their history and tamil religion gods (Indiran,Varunan, Theaivanai, etc.,) into hindus….etc.,

      Brahmins rights continues during chola reigns (Sundhara cholan - Who defeated Pandiyan with the help of Pallavas) Vijalaya cholan, Rajaraja cholan,First Rajendra cholan and etc., until last cholan Third Rajendra cholan defeated by pandiayans.
      Note that after KALAPIRARs were defeated, Caste ruled major role among Tamils. Tamil people became caste based on their job they were doing. Some doing their ancestral jobs and some people doing the job forced by Brahmins and kings. Rajaraja cholan who defeated Srilanka and built Tanjore temple (Built by 12000 peoples – don’t know the accurate count ,what they became, how many died), he made ‘Manutharmam’ as constitution , he strongly believed in ‘Life after Death’ , did whatever Brahmins said we can confirm it by painting in the temple , He is with his Guru (Brahmin) painted state that how Brahmins ruled Cholas.

      After Cholas reigns, Pandiyans did the same thing that they made the caste, Brahmin rights as stable. It continues After Nayakar reigns and British reigns.
      After Nayakar defeated Pandiyans they made Pandiyans becames Untouchables , forced to do leave lands ,rights etc.,
      Note that Brahmins became Brahmins and Pandiayans became Pallas (Untouchables , forced to do leave lands ,rights etc.,).

      Delete
    3. • The conflict here is now Pallars try to equal with Brahmins who made them untouchables , who made the tamil gods became hindus, who made tamil history into to Ariya history, who made tamil people into different castes, who made Tamil kings defeated by KALAPIRARs (with the help of his own tamil people, minor kings),defeated by Nayakars (with the help of different caste people made by Manutharmam)
      • The conflict here is now Pallars try to became Hindus which made them untouchables , which made the tamil gods became hindus, which made tamil history into to Ariya history, which made tamil people into different castes, which made Tamil kings defeated by KALAPIRARs (with the help of own his tamil people, minor kings),defeated by Nayakars (with the help of different caste people made by Manutharmam)
      • The conflict here is now they full support to ‘Caste’ say that Caste made Tamil undestroyed (Tamil undestroyed because it being spoken, written and read by all people) which made them untouchables , which made the tamil gods became hindus, which made tamil history into to Ariya history, which made tamil people into different castes, which made Tamil kings defeated by KALAPIRARs (with the help of own his tamil people, minor kings),defeated by Nayakars (with the help of different caste people made by Manutharmam)

      Delete
    4. Now the living PALLARs are real MALLARs of kings and Farmers and Soldiers After A.D only. – No doubt in this
      They are described above as Who made Brahmins became high castes, made tamilans into different castes based on their jobs, who made tamil gods into Hindu gods, who tuned tamil cultures into Ariya Culture (who do anything for money/power).

      The MALLARS described in poems before B.C., who made ‘Marutham’ who lived in Lemuria who are the descends of ‘Athi Vadimpalmba nindra pandiyan’, who communicated, trade, made civilization to/with Egyptians , Sumerians, Mayans ,Who developed tamil by forming ‘Head Tamil sangam’ ‘Middle Tamil Sangam’ and ‘Rear Tamil sangam’ , who worshipped ‘Indiran’, Who invented ‘Rise’ – are not only now living PALLARs , all peoples who called now as ‘Dravidans’ by history teachers.
      Because their blood mixed/branched with/into different people and Telungu, Malayalam and Kannadiyar branched from Tamil language.

      So accept the truth that now we are living in ‘Democratic’. We can unveil the history but can’t built the kingdom by proving the history. Don’t again start Brahmin, First rights, Hindus ,kings ,High Castes among tamil people.
      If you are accept the truth then, Please make tamil people unite by Love marriage. Make them hate Caste. Make them love each other and nature .Teach them World Polictics.
      So that only Tamil will rule the world again I meant like ‘Thirukural’ rule the world now.
      DALIT means Sociality equal (Samuga Nalan) . Don’t shy to say Dalit. DALIT word matches to Who are all defeated/scheduled/dominated by others in history. Use the Reservation which made available by Dr.Ambedkar to get the rights/powers, which we lost.
      Dr.Ambedkar Said ‘ Let slave know that She/he is a Slave. She/he would evolve himself/herself’ and ‘Teach, Unite and Evolve’.
      Let me say - Make pool water into dirty to catch the fish – Make the caste into dirty by Love marriage to catch the ‘Tamil-origin ’ which we lost by Brahmins.

      Delete
    5. KALLAPIRAR Reigns said that ‘Irunda kalam’ – Dark times. Means that they did’t rule properly. They did’t Sculptures,Sepedukal.,like other tamil gods…Recent researches will unveil everything…

      Delete
  10. Ayya Aayvukal niraya undu, neengal kooriya varalartru aayvu sari aanal, yathartha makkal vaalviyal, pesum mozhi ponravai patri ennakku neeraya kelvikal undu naan pesum thamizh purinthal vilakkam allikkavum. Muthalizh periyar EVR avarkal thaaimozhi telungu, Avar pesiya, aaivukal, yiakkam pontavai, avarkal pinpartrum kolkaikalai yen avarkal yinam vaalum Karnadakavilo, Andhiravilo yen parava villai, Parappavillai. Melum, Intha thiravida Kolkaikal nammaivida avarkalukkuthan, Athikam thevai. Avarkalthan migavum mooda nambikayudanum, pirpokku kolkayudanum saathiveriyudanum nadanthu kolkirarkal. Periyar theivam entral, avarkal allava, Nam yinathil yippadi Oru thalaivana ena portravendum. avarkal valum nattil, Oru yidathilkooda periyar silai illayey, aanal thamizh naatin thenkodi kumarimuna varai, Saibaba, koilkal ullathey. Melum neengal yinnamum varalarai aayvu seiyavendum, Ettyapuram samasthanathil vaalum Yathavarkal(Konaar), searvai entrey alaikkapadukintranar, Veeran Alakumuthukon alla Alakumuthu servai, aatharam, Parathi elthiya-pathipikaamal vita Ettayapuram samasthana varalau, "Vamsamanitheebikai", Parkavum. Melum Alakumuthukon pesiya mozhi Teluku, Kattarankulam, Aalankulam, Sivalarkulam, Oorkalil seitha samooka aayvil Ooril ulla periyorkal pesiathu teluku, melum Veeran alakumuthu kon Ettyapura samasthana padipirivin Ooru thalapathi enpathayum antha puthakam koorukirathu, Melaum Neenkal kooriya Mallar John pandiayan piranyha Oorum Sivalarkulamthan (Nellai District, Aalankulam Taluka). Melum Neenkal Father Caldvel Ayya Avarkalin "History Of Tnnevely" Padikkavendum, Appothaya nellai enpathu, tharpothaya nellai,viruthunagar, thoothukudi, ramanathapuram, melum sivagankai, Mathurai maavattathin silapakuthikal undu. Aayvu yenra vantha pinppu ellavartrayum aarayavendum, silavartrai thavirka koodathu.

    ReplyDelete
  11. Mallar pallar ஆண்ட ஜாதி கிடையாது ௬ம்மா comedy பன்ன வேண்டாம்

    ReplyDelete
  12. Mallar pallar ஆண்ட ஜாதி கிடையாது ௬ம்மா comedy பன்ன வேண்டாம்

    ReplyDelete
  13. சாதியால் கலப்பு திருமணத்தால் தமிழ் அடையாளம் அழியாது சாதி வெறியர்களே.தமிழைவளர்க்க தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள் சாதியையும் சாதி சான்றிதழையும் கிழித்துவிடுங்கள்.தமிழை உயிராகவும் மற்ற மொழிகளை உணவாகவும் எடுத்து கொள்ளுங்கள் சாதி வெறியர்களே.தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் தமிழர்கள் தமிழ் உணர்வுள்ள அனைவரும் தமிழர்கள் என்பதை மறவாதீர்கள் சாதி வெறியர்களே.

    ReplyDelete
  14. தமிழின் வகைகள்
    1)செந்தமிழ் - தமிழகம் மற்றும் கேரளம்
    2)கடுந்தமிழ் - கருநாடகம்,கொங்கினி மண்டலம்
    3)கொடுந்தமிழ் - ஒரிசா ஆந்திரம்

    மொழி வரலாற்றை படியுங்கள்
    ஒரு காலத்தில் இந்திய தேசம் முழுவதும் பேசிய மொழி தமிழ்.

    ReplyDelete
  15. உலகின் முதல் மொழி தமிழ், மனித குலம் தோன்றிய இடம் குமரி கண்டம்.
    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இங்கிருந்த மனிதன இனம் இயற்கை ,கலாச்சார மற்றும் மொழி மாற்றத்திற்குட்பட்டு வாழ்ந்து வருகிறான்...

    எடுத்துக் காட்டு
    உலகின் பழமையான இடத்தின் பெயர் ஊர்.
    கேமருனிய பழங்குடி மக்கள் இன்றும் தமிழ் பேசுகின்றனர்.
    மாயன், செவ்விந்தியர் இன்னும் பல...


    இதில் சாதி எங்கே... !

    எல்லாம் ஒரு சில விலங்கின மனிதர்களின் ஆசையே இந்த சாதி, இன, மொழி வேறுபாடுகளுக்கு காரணம்...

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி